RSS

Monthly Archives: October 2010

Endhiran with my Granny

Watched Endhiran (4th Time) with my 80 year old grandma 🙂

 
Leave a comment

Posted by on October 31, 2010 in Memories n Memoirs, Movies

 

பரத்தை கூற்று – புத்தக வெளியீட்டு நிகழ்வு

சரவண கார்த்திகேயன் (CSK) எனக்கு 2008-ல் ஆர்க்குட் மூலம் அறிமுகமானார். அறிமுகம் செய்தவர் திரு. சுஜாதா. விந்தையாக உள்ளதா? ஆம் சுஜாதாவின் முதலாம் ஆண்டு அஞ்சலிக்காக ஆர்க்குட் சுஜாதா கம்யூனிட்டியில் ஒரு பதிவிட்டேன். அதில் CSK-வின் பதிவும் இருந்தது. அவர்தான் சுஜாதா Community Owner.  உடனே அவரது Profile-ஐப் பார்த்தேன். அதிலிருந்த  அவரது வலைத்தள முகவரியைச் சொடுக்கி சில பதிவுகளை வாசித்தேன். மிகவும் ரசித்தேன், வியந்தேன். சுஜாதாவின் எழுத்துகள் போல இருந்ததே காரணம். உடனே அவருக்கு Friend Request கொடுத்தேன். அவரும் அதை accept செய்து நாங்கள் chat செய்தோம். அவர் மனைவி எங்கள் குடும்ப நண்பரின் மகள் மற்றும் என் சிறு வயது தோழி என்று தற்செயலாக தெரிய வந்தது. அதனால் அவருடன்  மேலும் நெருக்கம் ஏற்பட்டது. அவர் வலைப்பூவை தொடர்ந்து வாசித்தேன். அவருடைய  சில கருத்துகளில் எனக்கு முற்றிலும் உடன்பாடு இல்லையென்றாலும் அவரது எழுத்துகளும் தேர்ந்த நடையும் என்னைக் கவர்ந்தன.
CSK-வின் முதல் புத்தகமான சந்திரயானை இன்னும் படிக்கவில்லை என்று வருந்துகிறேன். இரண்டாம் புத்தகத்தின் தலைப்பே புருவம் உயர்த்த வைத்தது. “பரத்தை கூற்று” – இதுபோன்ற கவிதைத் தொகுப்பை வெளியிட சாரு நிவேதிதாதான் சரியான ஆள். மேலும் சாருவை அவரது வலைத்தளத்தில் மட்டுமே வாசித்துள்ளேன். அவரது புத்தகங்களைப் படித்ததில்லை, அவர் பேச்சையும் கேட்டதில்லை. சாருவை எனக்கு அவ்வளவாக பிடிக்காது என்றபோதிலும் அவர் எப்படித்தான் பேசுகிறார் என்பதைக் கேட்கவே இவ்விழாவைத் தவற விடக் கூடாது என்று சென்றேன்.
 
CSK-வின்  உறவினர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களுள் பெண்களும் பதின்ம வயதுச் சிறுமிகளும் அடக்கம். அதனால் சாரு uneasy-ஆக உணர்ந்தார்.  சற்றே தயக்கத்துடன் தன் பேச்சைத் துவங்கினார். தான் எதையும் பாராட்டுவதில்லை என்றும் குறைகளைச் சுட்டிக்காட்டி படைப்பாளிக்கு உதவி செய்வதாக கூறினார். இங்கேயும் எந்திரனை விடவில்லை. ஷங்கரையும், ரஜினியையும் கமலையும் வாரினார். பிறகு வைரமுத்து. CSK தனது கவிதைத் தொகுப்பை “கவிப்பேரரசு” வைரமுத்துவிற்கு அர்பணித்திருந்தார். அதற்குக் காரணம் பள்ளிப் பருவத்தில் அவருடைய கவிதை வைரமுத்துவால் முத்திரைக் கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு குங்குமத்தில் வெளியானது. சாருவுக்கு அந்த அடைமொழி பிடிக்காமல் நிலபிரபுத்துவம், மன்னராட்சி, சமத்துவம் என்றெல்லாம் கதைத்தார். சாருவின் எழுத்துகளைப் போல் அவரது பேச்சு அவ்வளவு சுவாரசியமாக இல்லை. சராசரிதான். He distracts from a topic and travels to many other topics. சாருவின் பேச்சிலிருந்து சில இங்கே 
(Courtesy : Tweets of @writercsk)
 
ஒரு பரத்தையின் உண்மையான உணர்வுகளை அந்த வலியை கவிதைல கொண்டு வர முடியுமான்னே சந்தேகமா இருக்கு.வேசியின் வலியை அப்படியே உண்மையாகச் சொல்லி கவிதையோ, திரைப்படமோ எடுத்தால் இங்கே வெளியிட முடியாது. இந்தத் தலைப்பில் எழுதுவதற்கு தைரியம் வேண்டும். அதற்கு முதலில் பாராட்டுகிறேன்.
 
இதுல எல்லாக் கவிதையும் Quotable Quotes.. ஆனா கவிதையா? நல்ல கவிதைங்கிற‌து டைனமைட் மாதிரி. அது சுலபமா வராது. அதை எழுத பிரசவ வேதனை அடையணும். பரத்தை கூற்று தொகுப்பில் இருப்பவை கவிதை என்ற நிலையை அடையவில்லை.நல்ல கவிதை எழுதுவது மிகக்கடினம். அதனாலேயே நல்ல க‌விஞர்கள் குறைவு. தமிழில் நல்ல் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் குறைவாகவே நல்ல கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள்.
 
எல்லோரும் கூப்பிட்டதுக்காக‌ ஆஹா ஓஹோன்னு புகழந்துட்டு போயிடுவாங்க. நான் அப்படி செய்ய விரும்பலை. கவிதை நல்லாயில்லைன்னு சொல்லி நான் இவருக்கு நல்லது தான் செய்யறேன்.. எல்லோரும் உண்மை சொல்ல மாட்டாங்க.
 
தான் பேசிய ஒரு மணி நேரத்தில் அதிகபட்சம் 15 நிமிடங்கள்தான் பரத்தை கூற்று பற்றிப் பேசியிருப்பார். மற்றவர்களைத் தாக்கிப் பேசுவதில்தான் அதிக ஆர்வமாக இருந்தார்.
 
 ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டவர் இப்படி விமர்சகராக மாறி அப்படைப்பாளியை “ஏண்டா இவரைக் கூப்பிட்டோம்” என்று எண்ணும்படி செய்துவிட்டார். எல்லாவற்றிற்கும் மேல் பரத்தைகள் இப்படி அவர்களது வலியினை மறந்து கவி பாட மாட்டார்கள் என்றும் பிதற்றினார். கவிதைகளில் லாஜிக் பார்க்கும் எழுத்தாளரை என்னவென்று சொல்வது. அவர் மேல் மிகவும் கொஞ்சமாக ஒட்டியிருந்த ஈடுபாட்டையும் சுத்தமாக துடைத்தெறிந்து  விட்டேன். ஆனாலும் ஒரு விதத்தில் அவரைப் பிடித்திருந்தது. தான் ஒரு காலத்தில் “Male Prostitute ” ஆக இருந்ததையும் அதைப் பற்றித்தான் இப்போது புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாகவும் கூறினார். அது உண்மையோ பொய்யோ, அப்படிச் சொல்வதற்கும் ஒரு ‘கெத்து’ வேண்டும்.
 
“விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய்
எவனும் மனசு தொட்டதில்லை!”
என்ற கவிதையை மேற்கோள் காட்டிப் பேசினார்.
 
‘குழந்தைகள் காதுகளைப் பொத்திக் கொள்ளுங்கள்’ என சொல்லிவிட்டு,
கண்களும் காம்புகளும்
பெரிதாக இருக்க வேண்டும்
உதடுகளும் பிளவுகளும்
சிறிதாக இருக்க வேண்டும்
நேயர் விருப்பம்

என்ற கவிதை படித்தார். இடையே நல்ல கவிதைக்கு உதாரணமாய் ஒரு கனடா கவிஞரின் கவிதையை தமிழில் வாசித்தார்.

 
இறுதியில் CSK தனது நன்றியுரையை ஒரு Paper பார்த்துப் படித்தார். ஒப்பித்தது போலிருந்தது. அடுத்த  முறை அதைத் தவிர்த்தல் நலம்!
 
கவிதைகளை விமர்சிக்கும் தகுதி எனக்கு இல்லை. பரத்தைக் கூற்று விலைமகளிரின் கதறல்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கவில்லை. ‘அரங்கேற்றம் பிரமிளா’ போலின்றி, ‘தப்புத்தாளங்கள் சரிதா’ போல் எள்ளலும் பரிகாசமும் செய்கின்றனர் இப்பரத்தையர்கள். தர்ம பத்தினியிடம்  தம்மைச்  சிலாகிக்கச் சொல்கின்றனர், தம் யோனிகளுக்குக் காப்பீடு கேட்கின்றனர், கடன் வைத்தால் மனைவியுடன் செல்கையில் வந்து வசூலிப்போம் என்று எச்சரிக்கை செய்கின்றனர்,
 
பல கவிதைகளை எனக்குப் பிடித்திருந்தாலும், அவற்றுள் சில:
 
இருபதாண்டு நெடிய
பரத்தைமைக்குப் பின்பும்
புடவையுடுத்துகையில்
மாராப்பைச் சரிசெய்யும்
விரல்களின் அனிச்சை!
பெண்களுக்கே உரித்தான நாணத்தை  ஓர் ஆண்மகன் வெளிப்படுத்துவது ஆச்சரியம் அளிக்கிறது.
 
உனக்கது களிப்புருப்பின் உச்சங்கள்
எனக்கோ கழிப்புருப்பின் எச்சங்கள்
நான் சகித்துப் புணர்வது உன் பணம்
நீ சுகிக்கப்புனர்வதோ என் பிணம் 
இக்கவிதை மூலம் வேசிகளின் வேதனைகளை வெளிப்படுத்துகிறார்.
 
இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். “கலிகால ராமன்கள்” மற்றும் “பெய்யெனப் பெய்யும் மழை” கவிதைகளும் கவர்ந்தன.  
 
வாத்ஸ்யாயனர் பற்றிய கவிதையில் எனக்கு உடன்பாடில்லை. அது தங்களையும் சந்தேகப் பட வைக்கிறது.

“என் போலுருத்தியிடம் போகாமல்

நிச்சயம் எழுதியிருக்க முடியாது

சரவண கார்த்திகேயன் – பரத்தை கூற்றை”
என்றால் ஒப்புக்கொள்வாரா??
இரவு முழுவதும் இருமுறை எல்லாக் கவிதைகளையும் வாசித்துவிட்டு இப்போது நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.
P.S : சாருவுக்கு பதில் லீனா மணிமேகலையை அழைத்திருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது
 
1 Comment

Posted by on October 17, 2010 in Books

 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துகள்

 
Leave a comment

Posted by on October 16, 2010 in Celebrations, Festivals

 

எந்திரன்

‘ஹாலிவுட் படங்களுக்கு நிகராக’ என்று இந்திய இயக்குனர்கள் சொல்லிக் கேட்டுக்கொண்டிருந்த நமக்கு உண்மையிலேயே அப்படி ஒரு படம் வெளிவந்து விட்டது. அதுவும் ஒரு தமிழ் படம், டிக்கெட் விற்பனையில் உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது என்று நாம் பெருமையோடு காலரைத் தூக்கி விட்டுக்கொள்ளலாம். இந்த எந்திரன் என்பவன் இந்திய சினிமா படைப்புகளின் உச்சம். இப்படி ஒரு படைப்பை உருவாக்கியதற்கு ஷங்கருக்கும் அவரது குழுவினருக்கும் ஒரு Royal Salute.

நான் ரஜினி  ரசிகன் அல்லன். அனால் இப்போது ரசிகன் ஆகிவிட்டேன். ஸ்டைல் மற்றும்  சண்டைக் காட்சிகளை விட தேர்ந்த நடிப்பைத்தான் ஒரு நடிகரிடம் விரும்புவேன். அவ்வகையில் நான் தீவிர கமல் ரசிகன், இல்லை வெறியன். ரஜினியை எனக்கு வில்லனாக மிகவும் பிடிக்கும். அவர்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற படங்களில் அவரது நடிப்பை மிகவும் ரசித்துள்ளேன். அவரது நகைச்சுவையும் பிரமிக்கத் தக்கது. தில்லு முல்லு, நினைத்தாலே இனிக்கும், நெற்றிக்கண் போன்றவை சாட்சி. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் அவரை நன்றாக mould செய்து வைத்திருந்தார். பிறகு அவர் சூப்பர் ஸ்டார் என்ற பிம்பத்தினுள் நடித்த படங்களை நான் விரும்பியதில்லை. ஒரு நடிகன் தன்னை முழுமையாக எவ்வித குறுக்கீடுமின்றி இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். அப்படி ரஜினி கடைசியாக நடித்தது தளபதி. அதன் பிறகு 19 வருடங்கள் கழித்து எந்திரன். ஆம் இது வழக்கமான ரஜினி படமும் அல்ல, ஊழல் சமூகத்தைத் திருத்தும் வழக்கமான ஷங்கர் படமும் அல்ல. முழுக்க முழுக்க Science Fiction திரைப்படம். இந்திய ரசிகர்களுக்காக ஆங்காங்கே  சில மசாலாக்களைத் தூவியுள்ளனர்.  
 
மனிதனைப் போல் ரோபோக்களை உருவாக்கி, ராணுவத்திற்கு வீரர்களுக்கு பதில் அந்த எந்திரன்களை அனுப்பும் லட்சியம் கொண்ட விஞ்ஞானி வசீகரனாக ரஜினிகாந்த். அவரது வசீகரக் காதலி, மருத்துவக் கல்லூரி மாணவி சனாவாக ஐஸ்வர்யா ராய். அதற்காக முதலில்  ஒரு எந்திரனை (Chitti, the Robot- Speed 1 Tera Hertz, Memory – 1 Zeta Byte) உருவாக்கி மனிதனால் முடியும் அனைத்தையும் program செய்கிறார். தொல்காப்பியம் முதல் தொழில்நுட்பம் வரை அனைத்தையும் அதன் 1 Z B மெமரியில் பதிவு செய்கிறார். அவரது உதவியாளர்களாக சந்தானம் மற்றும் கருணாஸ். வசீகரனின் பேராசிரியர் போரா (டேனி) ரோபோக்களைத் தீவிரவாதத்திற்குப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர். தான் படைத்த ரோபோவைவிட சிட்டி அதிக ஆற்றலைப் பெற்றுள்ளதைக் கண்டு அதனைத் தவறாகப் பயன்படுத்துகிறார். விளைவு சிட்டி அசுரன் போல் உலகையே அழிக்கும் வல்லமை பெறுகிறான். வசீகரன் தன்னை விட பன்மடங்கு ஆற்றல் மிக்க சிட்டியை எப்படி அழிக்கிறார் என்பதை ஷங்கருக்கே உரிய பிரம்மாண்ட பாணியில் காட்சிப் படுத்தி கண்களுக்கு விருந்தளித்து உள்ளார்.
 
ரஜினி ஒரு எந்திரமாகவே மாறியுள்ளார். ஷங்கர் என்ற எஜமானர் இடும் அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றியுள்ளார். ரஜினிக்கு 60 வயது என்று யாராவது சொன்னால் யாராலும் நம்ப முடியாதபடி மனிதர் நிறையவே மெனக் கெட்டிருக்கிறார். தான் மட்டுமே  தமிழ் சினிமாவின் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். பத்து வருடங்களுக்கு முன் கமல்ஹாஸனுக்காக உருவாக்கப்பட்ட  இத்திரைப்படத்தில் கமல் நடித்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக அமைந்திருக்காது என்று நினைக்க வைத்துவிட்டார் ரோபோ ரஜினி. Hats Off Rajnikanth 🙂 More Accolades are on your way 🙂
 ஐஸ்வர்யா ராய் – இவருக்குப் பிறகு எத்தனையோ உலக, பிரபஞ்ச அழகிகள் வந்தாலும் வருடங்கள் கழித்தும் கூட இவரே உலக அழகிக்கு உதாரணம் ஆகிறார். வழக்கமான ரஜினி பட கதாநாயகிகள் போலின்றி படம் முழுவதும் வருகிறார். ராவணனில் கந்தல் துணிகளுடனும் ஒப்பனையின்றியும் ஐஸைப் பார்த்து நொந்த Eyes-க்கு எந்திரனில் குளிர்ச்சி குளிர்ச்சி கூல் கூல். Also she’s damn hot! ஒப்பனைக் கலைஞர்களுக்கு ரஜினியும் ஐஸ்வர்யாவும் தம் சம்பளத்தில் ஒரு தொகையை தாராளமாக வழங்கலாம்.  ஓரிரு காட்சிகளில் முதிர்ச்சி தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.  ஐஸ்வர்யாவிற்கு ஒரு வேண்டுகோள். இனி தயவு செய்து தாங்கள் நடிக்கும் தமிழ்ப்படங்களுக்கு பெண் ஆடை வடிவமைப்பாளரை நியமிக்கவும். சப்யஸாச்சி, மனிஷ் மல்ஹோத்ரா போன்றவர்கள் தங்களது முன்னழகைக் காட்டுவதிலேயே முனைப்பாக உள்ளனர். எனது விருப்பம் . தமன்னா, த்ரிஷா போன்றவர்களையே தேவதைகளாக மாற்றும் நளினி ஸ்ரீராமைப் பரிந்துரைக்கிறேன்.
To be contd…
 
Leave a comment

Posted by on October 2, 2010 in Movie Reviews, Movies

 

Enthiran – My View

The much awaited release of the year Endhiran is out and I’m so glad for watching it on the first day unfortunately not the first show. I would like to declare that I’m not a Rajini fan, a hardcore Kamalhaasan fan and I don’t like Masala movies. I don’t watch much Hollywood action flicks too. Despite all these things, I wished to watch Endhiran only for the immortal writer Sujatha who conceived the theme more than a decade back. Not even for Shankar whose stupendous imagination I always wonder. Since his previous film Sivaji is a 100% Rajinikanth movie for whom the director compromised a lot.

Writer Sujatha is a master in science fiction stories and had written about computers and robots when India was just introduced to the Television. His stories made the viewers of the 80s consider him as a prophet who predicted the computirized world long back. His sci fiction novels could not be made into films due to the whopping budget. After almost a decade it’s possible to make the film Endhiran (Robot). Thanks to director Shankar and crew and producer Kalanidhi Maaran for spending crores to make it happen.

This time Shankar didn’t come with his run of a mill “Corruption” and not even a Hi tech Romantic Comedy. The crux of Endhiran is what would happen if a powerful machine is abused. Man makes machines but they will bring destruction to him if misused. With this one liner,  Shankar has given an ultimate Feast with Technology of International standard spiced up with Indian ingredients. Alongwith that he has shown what would happen if a Robot, the ultimate invention of man gets the feelings like anger, happiness, sorrow and LOVE!

Shankar’s choice was Kamalhaasan after his team up with Kamal in Indian. Then he moved to Shah Rukh Khan. But Rajnikanth proved that none other than him would have been apt for the role of Chitti, the robot. He proves again and again that he is the one and only Super Star. Man, he rocks. If you are a Rajini fan who expects him to dance for an intro song with philosophy, to run around trees for duet songs, to say punch dialogues, to fly and bang the baddies,  to say about his entry in politics, etc. this film may disappoint you. There are no usual Rajini stuff and this is a 100% Director’s Movie. He has given himself to Shankar and had been a slave to him, doing whatever his master says. He jumps, flies, fights, dances, sings, romances and what not. Atlast he makes us feel for him.What a dedication! No one can believe that he’s 60, a senior citizen. 

I always like Rajini’s performances in negative roles or with grey shades (Avargal Ramanathan, Moonru Muichu Prasad, 16 Vayadhinile Parattai, Mullum Malarum Kaali, Thalapathi Surya) and some of his comedy roles (Thillu Mullu Indran/Chandran, Ninaithale Inikkum Deepak, Netrikkan Father character). In Endhiran, he does the role of a comedian and also a villain apart from hero. So I loved the movie, esp the last 45 minutes where  the robot, Chitti turns villain. The visuals literally made my jaws drop. After K.Balachander, Mahendran & S.P.Muthuraman, Shankar has extracted the best from Rajinikanth. Loved “Chitti” Rajini more than “Fletcher” Kamal 🙂

Aishwarya Rai is still the world’s most beautiful woman. She makes the perfect choice for Sana who can make even a Robot woo her. I could not take my eyes off her when she’s with the Scientist Rajini. She sets the screen wit fire in the “Irumbile ore irudhayam” song. Sooo Hottt!!! Ash is back!!!  But Chitti steals the show even when the gorgeous Aish is with him. Luckily she has more scope throughout the movie unlike other Rajini film heroines and she has utilized it at her best.

Note: Since I watchedin a very average theater, I could not experience the Visual and A.R.Rahman’s Background Score properly. So the rest would be after watching it in a better Cinema Hall.

 
Leave a comment

Posted by on October 1, 2010 in Movie Reviews, Movies, Sujatha