RSS

Monthly Archives: July 2011

‘தெய்வத்திருமகள்’ நிலா அம்மா யாரு?

பொதுவாக பாலச்சந்தரின் படங்களில் திரையில் தோன்றாத உருவமில்லாக் கதாபாத்திரங்கள் இருக்கும். க்ளீஷேவாக இருந்தாலும் ரசிக்கும்படி சித்தரித்திருப்பார். படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் அக்கதாபாத்திரத்தைப் பற்றி அடிக்கடி சொல்லியோ, வெறும் குரலை மட்டுமே கேட்கச் செய்தோ Invisible Character-களைப் படைப்பதில் கே.பி.க்கு நிகர் அவரே. சில பிரத்யேக குணாதிசயங்களுடன் அழகாக Characterization செய்யப்பட்டு, திரையில் தோன்றாமலே நம்மை ரசிக்க வைக்கும்.

எதிர் நீச்சல் படத்தில் ‘இருமல்’ தாத்தா, தில்லு முல்லுவில் ரஜினியின் அப்பா அய்யம்பேட்டை அறிவுடை நம்பி, சொல்லத்தான் நினைக்கிறேன்-ல் சமையல்காரர் ஆனா ரூனாவின் மனைவி, மனதில் உறுதி வேண்டும்-ல் எஸ்.பி.பி.யின் மனைவி(One of the best), அழகன்-ல் மம்மூட்டியின் மனைவி, கல்கியில் ஃபாத்திமா பாபுவின் கணவர் போன்றவை திரையில் தோன்றாமலே படம் நெடுக குறிப்பிடப்படும்.

அதுமட்டுமன்றி உர்யிரற்றப் பொருட்களைக் கூட கதாபாத்திரம் ஆக்கி உயிரூட்டி விடுவார். அவர்கள் ‘ஜூனியர்’, அச்சமில்லை அச்சமில்லை ‘அருவி’ (டைட்டிலில் இவர்களுடன் ‘குற்றாலம் அருவி’ என்று போடப்படும்’!), அழகன் ‘தொலைபேசி’ (இதுவும் டைட்டில் கார்டில் இடம்பெறும்), அபூர்வ ராகங்கள் ‘நாற்காலி’, வானமே எல்லை ‘பணப்பெட்டி’, இருகோடுகள் FILE-ஐயும் புதுப் புது அர்த்தங்க ‘அமலா கட் அவுட்’டையும் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

தெய்வத்திருமகள் படத்தில் விக்ரம் மனைவி கதாபாத்திரமான பானுவை இறுதி வரைக் காட்டாமல் என் Curiosity-ஐ அதிகரித்துவிட்டனர். ஏற்கனவே இதுபோல் சில படங்களில் நடிகர்களைத் திரையில் காட்டாமல் புகைப் படங்கள் மட்டும் காட்டப் பட்டுள்ளன. மகாநதியில் கமலின் மனைவியாக ஜெயசுதா புகைப்படத்தில் மட்டும் காட்டப் படுவார். அதுபோல் ‘மேட்டுக்குடி’யில் ஜெமினியின் மனைவியாக கே.ஆர்.விஜயாவின் படம், ‘நினைவிருக்கும் வரை’யில் சுஜாதாவின் கணவராக முத்துராமனின் படம், ‘சிறுத்தை’-ல் கார்த்தியின் இறந்துபோன மனைவியாக பூமிகா போன்றவர்களின் புகைப்படங்கள் மட்டும் காட்டப்பட்டுள்ளன.

ஆனால் ‘தெய்வத்திருமகள்’-ல் ஃபோட்டோவில்கூட பானு காட்டப் படமாட்டார். அழகன் அளவுக்கு ஈர்க்காவிட்டாலும் என் மண்டைக்குள் நண்டைப் பிராண்டவிட்டதில் இயக்குனர் ஜெயித்துவிட்டார்! அந்தப் புகைப்படத்தை யார் பார்க்கிறார்களோ அவர்களது பிம்பம் மட்டுமே தெரியும். பின் நவீனத்துவம் அடிப்படையில் அலசி ஆராய்ந்ததில் சில குறியீடுகள் புலப்பட்டன. குழந்தை பிறந்து பானு இறந்ததும் அதை விக்ரம் பார்க்கும்போது அவர் பிம்பம் தெரியும். அப்போது அவர்தான் குழந்தைக்கு அம்மாவாகவும் இருக்கிறார். பின் நிலா வளர்ந்து அந்த ஃபோட்டோவைப் பார்க்கும்போது அவள் பிம்பம் தெரிகிறது. அப்போது அவள் விக்ரமுக்கு அம்மாவாக இருக்கிறாள். பின் அமலா பால் அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும்போது அவரது பிம்பம் தெரிகிறது. அதிலிருந்து நிலாவுக்கு அமலா பால்தான் அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்த்துக் கொள்கிறார் இதுபோன்ற பின் நவீனத்துவக் குறியீடுகள் வேறு யாருக்காவது தோன்றியதா? 😉

கடைசி இரண்டு பத்திகளைக் கண்டு கொள்ளாமல் தமிழ்த் திரையில் தோன்றாத மற்ற கதாபாத்திரங்களை மறுமொழியிடவும் 🙂

 
4 Comments

Posted by on July 28, 2011 in Chummaa, Movies

 

தெய்வத்திருமகள் – An Indianized Pizza

Disclaimer: 21.7.2011 அன்று Google Buzz-ல் எழுதியது. படம் வெளியாகி பலரும் பார்த்துவிட்ட நிலையில் சில காட்சிகளைக் குறிப்பிட்டு இப்பதிவில் சேர்த்துள்ளேன்.

‘அமெரிக்காக்காரனுக்கு சாப்பிட ப்ரெட் பட்டர் இருந்தா போதும். நம் ஆட்களுக்கு சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், அப்பளம் ஊறுகாய் என்று சகலமும் வேண்டும்’ என்று சுஜாதா சொன்னார். நம் மக்கள் நூடுல்ஸ், பீட்ஸாவைக் கூட கரம் மசாலா, கொத்துமல்லி கறிவேப்பிலையுடன்தான் சாப்பிட விரும்புகின்றனர். உணவு வகைகளை Authentic-ஆக சாப்பிடப் பிடித்தவர்களுக்கு அவ்வாறு சாப்பிடப்பிடிக்காது. தெய்வத்திருமகள் படமும் ஒரு Indianized Pizza போலதான் இருக்கிறது.

I am Sam பார்ப்பதற்கு முன் இதைப் பார்த்திருந்தால் நானும் எல்லோரைப் போலவும் நெகிழ்ந்து, கண்ணைக் கசக்கி, அழுது சிலாகித்திருப்பேன் – கிகுஜிரோவுக்கு முன் பார்த்த நந்தலாலாவைப் போல. எந்தவித முன் தீர்மானமுமின்றி பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தும் முடியாமல் போனது. குழந்தைக்கு ஷூ வாங்கும் காட்சி, விக்ரமின் நண்பர்கள் கோர்ட்டில் சாட்சி சொல்லும் காட்சி போன்றவற்றை அப்பட்டமாகக் காப்பியடித்து மற்ற காட்சிகளை சாமர்த்தியமாக மாற்றிவிட்டார் இயக்குனர். திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்தது சற்று ஆறுதலளித்தது. இறுதியில் நாயகனும் நாயகியும் சேர்ந்தே ஆக வேண்டும் என்ற தமிழ் சினிமா ஃபார்முலாவை உடைத்தெறிந்ததற்காக இயக்குனரைப் பாராட்டலாம். நிலாவாக நடித்திருக்கும் கொள்ளை சாரா அழகாலும் அபாரமான நடிப்பாலும் நம் மனத்தைக் கொள்ளை கொள்கிறாள். நிலாவைப் பற்றி நண்பர் கார்க்கியின் பதிவு

அவன் இவன் படம் பார்த்து விஷாலுக்கு தேசிய விருதுக்குப் பரிந்துரைத்தவர்கள் இப்போது விக்ரமுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்து விட்டனர். விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் I am Sam-ல் ஷான் பென் நடித்தது போலவே தெரியாது. அதுதான் ஹாலிவுட்டுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம். சில செயற்கையான சினிமாத்தனமான காட்சிகள் எரிச்சலூட்டுகின்றன. நாசர் மகனுக்கு விக்ரம் மருந்து வாங்கித் தரும் காட்சி எரிச்சலின் உச்சக்கட்டம். மென்சொகத்தைப் பிழிய வேண்டுமென்றே இதுபோல் பல காட்சிகள் திணிக்கப்பட்டுள்ளன.

தேவையே இல்லையென்றாலும் ‘விழிகளில் ஒரு வானவில்’ பாடலும், பிக்ச்சரைசேஷனும் அருமையோ அருமை! (அனுஷ்காவும் ;-)). அதேபோல் ‘கத சொல்லப் போறேன்’ பாடல் ஒரு குழந்தையின் கண்ணோட்டத்தில் படமாக்கி இருப்பது நன்றாக இருந்தது. I am Sam-ல் இல்லாத மூன்று நல்ல விஷயங்கள் தெய்வத்திருமகள்-ல் இருக்கின்றன – அனுஷ்கா, அமலா பால், சந்தானம். விஜய் அவார்ட் நிகழ்ச்சியில் சந்தானம் தனது காட்சிகள் அனைத்தும் ஆண்களுடனே இருப்பதாக வருத்தப் பட்டார். ஆனால் இதில் படம் முழுவதும் அனுஷ்காவுடனேயே வருகிறார்.

இரண்டு அழகான கதாநாயகியர் இருந்தும் கவர்ச்சிப் பாடல்கள் இல்லை விக்ரமுக்கு சண்டைக் காட்சிகள் இல்லை, சந்தானத்துக்கு தனி காமெடி ட்ராக் இல்லை. குடும்பத்துடன் சென்று பார்க்கும்படியான படம் தந்ததற்காக விஜய்க்கு மீண்டும் பாராட்டுகள். அதே சமயம் ஆடுகளம், ஆரண்ய காண்டம், போன்ற படங்கள் வந்து நம் ரசனையை மேலெழுப்பி அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்கையில், Melodrama, Sentiment என்று சோகத்தைப் பிழிந்து அழவைத்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்று நம் ரசனையை வளர விடாமல் மட்டுப் படுத்துவது ஒரு சினிமா ஆர்வலனாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பின்குறிப்பு: வெகு சில அயல் சினிமாக்களைப் பார்த்த எனக்கே திருப்தியில்லாதபோது ஒலக சினிமா ரசிகர்களுக்கு எப்படி இருக்குமோ தெரியவில்லை 🙂

 
Leave a comment

Posted by on July 28, 2011 in Movie Reviews, Movies

 

போறானே போறானே – வாகை சூடவா

சமீபத்தில் வந்த பலரும் நன்றாக இருப்பதாக சொன்ன ‘வாகை சூடவா’ பாடல்களை வார இறுதியில் தரவிறக்கி வைத்திருந்தேன். இன்றுதான் கேட்க முடிந்தது. களவாணி இயக்குனர் சற்குணம் இயக்கும் இப்படத்தில் மீண்டும் விமல்தான் நாயகன். களவாணி என்னை வெகுவாகக் கவராததால் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தேன். ஆனால் 70களில் நடப்பதுபோல் கதை கொண்ட இந்த பீரியட் படத்தின் ஸ்டில்களை விகடனில் பார்த்தபோது ‘அட’ போட வைத்தன.

ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவியாளராக இருந்த ஜிப்ரான் என்பவரின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கின்றன. கேட்டவுடனே இரண்டு பாடல்கள் மிகவும் ஈர்த்துவிட்டன. ஒன்று சின்மயி பாடி ‘சாரக் காத்து’. இன்னொன்று நேஹா பசின் மற்றும் ரஞ்சித் பாடிய ‘போறானே போறானே’.
இரண்டாவது பாடலை மாலையிலிருந்து இப்போதுவரை கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

வசீகரிக்கும் வாஸந்தி ராகத்தில் அமைந்த இப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவது இசை, வைரமுத்துவின் வைடூரிய வரிகள் மற்றும் நேஹா பசினின் மண் மணம் கமழும் குரல். ‘சத்தம் போடாதே’ படத்தில் அவர் பாடிய ‘பேசுகிறேன் பேசுகிறேன்’ பாடல் மிகவும் பிடித்திருந்தாலும் இதுபோன்ற ஒரு கிராமியப் பாடலை Nativity சிறிதும் சிதைக்காமல் பாடியிருப்பது மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது. சில இடங்களில் ஹிந்தி பாடகி ரேகா பரத்வாஜை நினைவு படுத்துகிறார். புதிய இசையமைப்பாளர் ஜிப்ரான் ‘வாகை சூடவா’ மூலம் தமிழ்த்திரை இசையில் நிச்சயம் வெற்றி வாகை சூடுவார் 🙂

வைரமுத்துவின் பிறந்த நாளான இன்று அந்தப் பாடல் வரிகளை இங்கு பகிர்கிறேன்.

Lyrics Courtesy http://www.dhool.com

போறானே…போறானே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல

போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
போறாளே போறாளே காத்தோட தூத்தல போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

பருவம் தொடங்கி ஆசை வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூசை வச்சேன்
மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட
ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா
டீ தூளு வாசம் கொண்ட மோசக்காரா
அட நல்லாங்குருவி ஒண்ணு மனச மனச
சிறு கன்னங்குழியிலே பதுக்கிருச்சே
சின்ன சின்ன தொரட்டிப்பொண்ணு
கண்ணு முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே

போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட
உன்னை பார்த்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்
மூக்கணாங்கவுற போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடை காக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு
அடி மஞ்சக்கிழங்கு உன்னை நினைச்சு நினைச்சு
தினம் மனசுக்குள்ள வச்சு பூட்டிக்கிட்டேன்
உன் பிஞ்சுவிரல் பதிச்ச மண்ணை எடுத்து
நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்

போறாளே…போறாளே
போறாளே…போவாமத்தான் போறாளே

அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே போறானே காத்தோட தூத்தல போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறானே…போறானே…போறானே

காத்தோட தூத்தல போல போறானே,

மழையில் நனைஞ்ச காத்தை போல
மனசை நீயும் நனைச்சுப்புட்ட

டீத்தூளு வாசம் கொண்ட மோசக்காரா

ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாய்யா
பொண்ணு மனசை கொஞ்சம் புனைய வாய்யா

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்லை எரிஞ்சு குழப்பிப்புட்ட

மூக்கணாங்கவுறப் போல உன் நெனப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு

உன்னை பாத்து பேசையில
ரெண்டாம் முறையா குத்த வச்சேன்

போன்ற வரிகளை வெகுவாக ரசித்தேன்!

 
7 Comments

Posted by on July 13, 2011 in Movies, Music