RSS

Monthly Archives: November 2011

இக்குதே கண்கள் விக்குதே

கடந்த இரண்டு நாட்களாக வித்தகனில். ஜோஷ்வா ஸ்ரீதரின் முந்தைய படமான வெப்பம் அளவுக்கு இல்லை என்றாலும் நன்றாகவே உள்ளன. என் விருப்பத்திற்குரிய பாடகிகள் ஷ்ரேயா, சின்மயி, ஷ்வேதா பாடிய மூன்று மெலடிகள் காதுகளில் ரீங்காரமிடும் வகை. அதிலும் அதிகமாக கேட்டது ஷ்ரேயா-ஹரிஹரன் பாடிய இக்குதே கண்கள் விக்குதே பாடல்தான். Best of the Album.

முன்பெல்லாம் ஒரு ஆல்பத்தில் ஷ்ரேயா கோஷால் பெயருள்ள பாடலைத்தான் முதலில் கேட்பேன். அதைக் கேட்டால் மற்ற பாடல்களைக் கேட்காமல் இக்னோர் செய்துவிடுவதால் இப்போதெல்லாம் எல்லாப் பாடல்களைக் கேட்டபின் ஷ்ரேயாவின் பாடலை இறுதியாக கேட்கிறேன். ஆனாலும் அதுதான் பிடிக்கிறது. கொடியசைந்ததும் காற்று வந்ததா காற்று வந்ததும் கொடியசைந்ததா என்பதுபோல் சிறந்த பாடலை ஷ்ரேயாவிற்குக் கொடுக்கிறார்களா இல்லை ஷ்ரேயா பாடுவதால் அது சிறந்த பாடலாகி விடுகிறதா? 😉

காதல் சொட்டச் சொட்ட பார்த்திபன் எழுதிய வரிகள் மிகவும் கவர்ந்தன.

இக்குதே கண்கள் விக்குதே
ஈரம் சொட்ட முத்தம் தாராயோ
இட்டுதே வெட்கம் முட்டுதே
நீயும் தட்ப வெட்பம் தீர்ப்பாயோ

அட்டையாய் ஒட்டியே
உணர்ச்சியை உறிஞ்சியே
வெறும் சக்கையாய் சாய்கிறேன்
நீ துப்பிடும் பார்வையால்

அதிகாலை செய்தித்தாள் போலே
நுழைந்தாயே… கதவோரம்
ஓ.. நிழல் தானே என நான் நடந்தேனே
தொடர்ந்தாயே… அழகாக

நிழலுக்கும் புவியிர்ப்பு விசை கொண்டாயே
மிதக்கும் நிலை தரை மீதே நான் கொண்டேனே

அன்பை வெடிக்க வைத்து என்னை இழக்க செய்த
கண்ணே கன்னி வெடிகுண்டே

புடவைக்குள் ஒரு போர்க்களம்
கூறாயுதங்கள் ஓராயிரமே இவளிடம்
வெல்வதோ மடி வீழ்வதோ
போரிடுவதே பேரின்பமே பெருந்தவம்

இருட்டாக்கும் உன்னால் மின்வெட்டாய்
அணைத்தாயே மணி நேரம்
ஓ.. மின்சாரம் உற்பத்தி செய்தோம்
ஏராளம் இதழோரம்

கவனம் கொள் கணிதத்தில் என்னை கொல்லாதே
கணக்கின்றி வழக்கின்றி இன்பம் துய்ப்போமே

மறுகன்னம் காட்டி முத்தம் வாங்கித் தின்னும்
சிலுவைக் காதல் பெண்ணே…

(இக்குதே)

 
1 Comment

Posted by on November 10, 2011 in Music, Shreya Ghoshal