RSS

Monthly Archives: August 2011

வாடா பின்லேடா

மங்காத்தாவில் ‘வாடா பின்லேடா’ என்ற கருத்தாழமிக்க ஒரு பாடலைக் கேட்டதுமே பிடித்துவிட்டது. பாடலாசிரியர் வேறு யாராக இருக்கும்? ‘பத்மஸ்ரீ’ கவிஞர் வாலிதான்! என்னமாய் எழுதி இருக்கிறார்! தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கிறேன் :)பாய்ஸ் படத்தில் வரும் முன்னாவின் அறிமுகக் காட்சியில் வரும் கவிதையை எழுதியவரும் ‘வாலி’தானா?

பாடலைப் பாடிய மிர்ச்சி சுச்சி – செம்ம ஹாட்டு மச்சி. பாடகர் க்ரிஷ்ஷின் குரல்கூட வித்தியாசமாக உள்ளது. வரிகள் ஒவ்வொன்றும் மணி மணியாய் உள்ளன. உதா – ‘நூலாடை நிற்காத இடுப்பு; நீ வந்து சோறாக்கும் அடுப்பு’. – Marvelous! மேலும் வரிகளுக்குப் பாடலைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். Beautiful… Wonderful… Marvelous…(ஆரண்ய காண்டம் ஜாக்கி ஷ்ராஃப் குரலில் படிக்கவும் ;-)) பின் லேடனைக் கொல்வதற்கு முன்னமே எழுதப் பட்டிருக்க வேண்டும். சென்சாரில் கத்தரிக்கப் படாமல் முழுவதுமாக திரையில் வருமா என்பது சந்தேகம்தான்.

வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி பாடலாசிரியராக வந்தாலும் அவரது வாரிசு ‘ஹைக்கூ கார்க்கி’ வளர்ந்து பாடலாசிரியராக வந்தாலும் வாலி இதுபோன்ற பாடல்களை இளமை ததும்ப எழுதி தமிழ்த் துண்டு ஆட்டுவார் 🙂

சஹானாவிற்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தெய்வீகமான ‘தர்மவதி’ ராகத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. இதை அருமையான மெலடி பாடலாக இசையமைக்காமல் யுவன் இப்படி கில்மா பாடல் ஆக்கிவிட்டாரே வருத்தம் என்ற இருந்தாலும் இடையிசை துணுக்குகளில் அதைச் சரி செய்து விட்டார். ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ (மன்மத லீலை) மீண்டும் மீண்டும் வா (விக்ரம்), ஒட்டகத்தக் கட்டிக்கோ என்று அவர் முன்னோடிகள் கூட இதுமாதிரி Erotic பாடல்களுக்கு இந்த ராகத்தில் இசையமைத்திருக்கிறார்களே!

தர்மவதியில் அமைந்த சில பாடல்கள்

ஒரு நாள் இரவு – காவியத்தலைவி
என்னுள்ளில் எங்கோ – ரோசாப்பூ ரவிக்கைக்காரி (Evergreen ! Esp 2nd interlude)
இளஞ்சோலை பூத்ததா – உனக்காகவே வாழ்கிறேன் (Simply ILAYARAJA)
தத்தித்தோம் – அழகன்
எழுதுகிறேன் ஒரு கடிதம் – கல்கி
வானவில்லே வானவில்லே – ரமணா
தவமின்றி கிடைத்த வரமே – அன்பு

தர்மவதியின் ஹிந்துஸ்தானி இணையான/ஜன்யமான ‘மதுவந்தியி’ல் அமைந்த பாடல்கள்

நந்தா நீ என் நிலா – நந்தா என் நிலா (இந்த ராகத்தில் ஆகச்சிறந்த பாடல்)
கனா காணும் காலங்கள் – 7/ஜி ரெயின்போ காலனி
கண்ட நாள் முதலாய் – கண்ட நாள் முதல்

 
2 Comments

Posted by on August 12, 2011 in Chummaa, Music

 

2nd Blogoversary

இந்த வலைப்பூவைத் துவங்கி இரண்டு வருடங்கள் முடிந்துவிட்டன. முதலாம் ஆண்டின் நிறைவின் போது எழுதியதுபோல் இரண்டாம் ஆண்டு குறைவான பதிவுகள் எழுதியிருந்தாலும் நிறைவாக எழுதி இருக்கிறேன் என்று மகிழ்கிறேன். படித்ததுப் பார்த்து விட்டு நன்றாக இல்லை என்று சொல்வது எவ்வளவு சுலபம் என்று எழுதும்போதுதான் தெரிகிறது. கடந்த வருடத்தில் இருந்து தமிழில் எழுதத் தொடங்கி இருந்தாலும் டிசம்பரில் இருந்துதான் என் எழுத்து கொஞ்சம் தேறி இருப்பதாக நினைக்கிறேன். என் வலைப்பூவை வாசிக்கும் வெகு சில வாசகர்களுக்கு இந்த மாற்றங்கள் தெரிந்திருக்கும். அடுத்த ஆண்டு மேலும் சில நல்ல பதிவுகளுடன் என் எழுத்தில் மேலும் மேன்மை கூடும் என்ற நம்பிக்கையோடு இந்தத் தளத்தை வாசிப்பவர்களுக்கும், மறுமொழி இடுபவர்களுக்கும் இடாதவர்களுக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

 
Leave a comment

Posted by on August 7, 2011 in Celebrations, Milestones

 

இந்தி இளைய நிலா

டிஸ்கி: முந்தைய இரு பதிவுகளைப் படித்தவர்கள் இதுவும் ‘தெய்வத்திருமகள்’ நிலா பற்றியது என்று எண்ண வேண்டாம். இந்தப் பதிவிற்கும் ‘தெய்வத்திருமகள்’ படத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை 🙂

நான் கல்கத்தாவில் இருந்தபோது பெங்காலி நண்பன் ஒருவனின் ரிங்டோனைக் கேட்டு பரவசம் அடைந்தேன். ஆர்வத்தில் அந்தப் பாடலை எப்படி ரிங்டோனாக வைத்திருக்கிறான் என்று கேட்டேன். தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று சொன்னான். இளையராஜாவின் இசை வங்காளத்தில் கூட பிரபலமாய் இருக்கிறதே என்ற பூரிப்பில் எனக்கும் மிகவும் பிடிக்கும் என்று என் மடிக்கணினியில் அந்தப் பாடலை ஒலிக்கச் செய்தேன். குழப்பம் அப்பிய முகத்துடன் ‘இந்தப் பாடல் தமிழிலும் இருக்கிறதா?’ என்று கேட்டு என் முகத்திலும் கொஞ்சம் குழப்பத்தைப் பூசிவிட்டான். ‘இது தமிழ்ப் பாடல்தான், இளையராஜா இசை அமைத்தது’ என்று சொன்னேன். ‘இல்லை இது ஹிந்திப் பாடல். கிஷோர் குமாரின் பிரபலமான பாடல்’ என்று சொன்னான். நான் நம்பவில்லை. அவன் மடிக்கணினியில் அப்பாடலை ஒலிக்கச் செய்தான். என் காதுகளை நம்பவே முடியவில்லை. ‘இளைய நிலாபொழிகிறது’ பாடலின் மெட்டில் ஹிந்தி பாடல் ஒன்று ஒலித்தது . அதே பல்லவி ஆனால் சரணங்களில் மட்டும் மெட்டு மாறிவிட்டது. தமிழில் காப்பி அடித்துவிட்டார்கள் என்று நண்பன் பரிகசித்தான். உண்மையிலேயே இளையராஜா ஹிந்தியில் இருந்து காப்பி அடித்து விட்டாரா என்று வருந்தினேன். ஏனென்றால் கிஷோர் குமார் பழைய படங்களில்தான் பாடி இருக்கிறார் என்று நினைத்திருந்தேன்.

உடனே இணையத்தில் அந்தப் பாடலைப் பற்றிய விபரங்கள் சேகரித்தேன். பயணங்கள் முடிவதில்லை 1982ல் வெளியானது அதன் ரீமேக் கலாக்கார் 1983-ல் வெளியானது. ஆகவே தமிழில் இருந்துதான் ஹிந்திக்கு வந்தது என்று ஆதாரங்களுடன் அவனுக்குக் காட்டினேன். ‘இளைய நிலா’வின் பல்லவியை மட்டும் எடுத்துக் கொண்டு சாமர்த்தியமாக சரணங்களை மாற்றி விட்டார் இசையமைப்பாளர் பப்பி லஹரி. நம் இயக்குனர்கள் ஆங்கிலப் படங்களைக் காப்பி அடிப்பது போல் முழுவதும் சுடாமல் ஆங்காங்கே டிங்கரிங் செய்து ஹிந்தி மக்களுக்கு ஏற்றவாறு மாற்றிவிட்டார்.

அனைவரும் பெரிதாகச் சொல்லும் கிஷோர் குமாரின் குரல் பிடித்திருந்தாலும் இந்தப் பாடலில் ஈர்க்கவில்லை. முதலில் எஸ்.பி.பி. பாடிக் கேட்டது காரணமாக இருக்கலாம். பிறகு கிஷோர் குமாரின் பழைய பாடல்களைத் தேடித் தேடிக் கேட்டேன். எல்லா வகைப் பாடல்களிலும் கலந்து கட்டி இசை விருந்தளித்தவர். சோனி டிவியில் K for Kishore என்று அவரது பாடல்களை மட்டும் பாடும் ஒரு ரியாலிடி ஷோவைத் தவறாமல் பார்த்துக் கொண்டிருந்தேன் ஒருமுறை அலுவலகத்தில் நடந்த பார்ட்டியில் இளைய நிலாவைப் பாடி இறுதியில் நீலே நீலே அம்பரில் முடித்தேன். இந்தப் பாடலின் இன்னொரு வெர்ஷனை இளம் சாதனா சர்கம் பாடியுள்ளார். படத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.

பிரபல ஹிந்தி நடிகர் மனோஜ் குமாரின் மகன் குணால் கோஸ்வாமி கதாநாயகனாகவும் ஸ்ரீதேவி கதாநாயகியாக நடித்தனர். ஸ்ரீதேவியின் தோழியாக உதிரிப் பூக்கள் படத்தில் விஜயன் மச்சினியாக நடித்த மதுமாலினி நடித்துள்ளார்.
ஏ ஆத்தா அத்தோரமா வாரியா பாடலின் ஹிந்தி வெர்ஷன்.

மணியோசை கேட்டு எழுந்து பாடலின் ஹிந்தி வெர்ஷன்.

 
Leave a comment

Posted by on August 5, 2011 in Music