மங்காத்தாவில் ‘வாடா பின்லேடா’ என்ற கருத்தாழமிக்க ஒரு பாடலைக் கேட்டதுமே பிடித்துவிட்டது. பாடலாசிரியர் வேறு யாராக இருக்கும்? ‘பத்மஸ்ரீ’ கவிஞர் வாலிதான்! என்னமாய் எழுதி இருக்கிறார்! தேசிய விருதுக்குப் பரிந்துரைக்கிறேன் :)பாய்ஸ் படத்தில் வரும் முன்னாவின் அறிமுகக் காட்சியில் வரும் கவிதையை எழுதியவரும் ‘வாலி’தானா?
பாடலைப் பாடிய மிர்ச்சி சுச்சி – செம்ம ஹாட்டு மச்சி. பாடகர் க்ரிஷ்ஷின் குரல்கூட வித்தியாசமாக உள்ளது. வரிகள் ஒவ்வொன்றும் மணி மணியாய் உள்ளன. உதா – ‘நூலாடை நிற்காத இடுப்பு; நீ வந்து சோறாக்கும் அடுப்பு’. – Marvelous! மேலும் வரிகளுக்குப் பாடலைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். Beautiful… Wonderful… Marvelous…(ஆரண்ய காண்டம் ஜாக்கி ஷ்ராஃப் குரலில் படிக்கவும் ;-)) பின் லேடனைக் கொல்வதற்கு முன்னமே எழுதப் பட்டிருக்க வேண்டும். சென்சாரில் கத்தரிக்கப் படாமல் முழுவதுமாக திரையில் வருமா என்பது சந்தேகம்தான்.
வைரமுத்துவின் வாரிசு மதன் கார்க்கி பாடலாசிரியராக வந்தாலும் அவரது வாரிசு ‘ஹைக்கூ கார்க்கி’ வளர்ந்து பாடலாசிரியராக வந்தாலும் வாலி இதுபோன்ற பாடல்களை இளமை ததும்ப எழுதி தமிழ்த் துண்டு ஆட்டுவார் 🙂
சஹானாவிற்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த தெய்வீகமான ‘தர்மவதி’ ராகத்தில் இப்பாடல் அமைந்துள்ளது. இதை அருமையான மெலடி பாடலாக இசையமைக்காமல் யுவன் இப்படி கில்மா பாடல் ஆக்கிவிட்டாரே வருத்தம் என்ற இருந்தாலும் இடையிசை துணுக்குகளில் அதைச் சரி செய்து விட்டார். ‘ஹலோ மை டியர் ராங் நம்பர்’ (மன்மத லீலை) மீண்டும் மீண்டும் வா (விக்ரம்), ஒட்டகத்தக் கட்டிக்கோ என்று அவர் முன்னோடிகள் கூட இதுமாதிரி Erotic பாடல்களுக்கு இந்த ராகத்தில் இசையமைத்திருக்கிறார்களே!
தர்மவதியில் அமைந்த சில பாடல்கள்
ஒரு நாள் இரவு – காவியத்தலைவி
என்னுள்ளில் எங்கோ – ரோசாப்பூ ரவிக்கைக்காரி (Evergreen ! Esp 2nd interlude)
இளஞ்சோலை பூத்ததா – உனக்காகவே வாழ்கிறேன் (Simply ILAYARAJA)
தத்தித்தோம் – அழகன்
எழுதுகிறேன் ஒரு கடிதம் – கல்கி
வானவில்லே வானவில்லே – ரமணா
தவமின்றி கிடைத்த வரமே – அன்பு
தர்மவதியின் ஹிந்துஸ்தானி இணையான/ஜன்யமான ‘மதுவந்தியி’ல் அமைந்த பாடல்கள்
நந்தா நீ என் நிலா – நந்தா என் நிலா (இந்த ராகத்தில் ஆகச்சிறந்த பாடல்)
கனா காணும் காலங்கள் – 7/ஜி ரெயின்போ காலனி
கண்ட நாள் முதலாய் – கண்ட நாள் முதல்