மஹாளய அமாவாசை – மிகவும் புனிதமாகக் கருதப்படும் இந்நாள் நம் ஊரில் பித்ருக்களை நினைத்து வணங்குகிறோம். வங்காளத்தில் இன்றுதான் துர்கா பூஜா பந்தல்களில் வைக்கப்படும் துர்கை சிலைகளுக்குக் கண் வரைவார்கள். துர்க்கை சிலை செய்வதற்கான முதல்பிடி மண்ணாக ஒரு விலைமகளின் காலடி மண்ணைத்தான் பயன்படுத்துவார்கள். இதையொட்டி நரசய்யா எழுதிய ஒரு சிறுகதையை விகடனில் படித்த நினைவு. பெயர் நினைவில்லை.
ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில்தான் சேர்வேன் என்று அடம்பிடித்து அம்மாவின் இமோஷனல் ப்ளாக்மெயிலால் தோல்வியடைந்து துளியும் ஆர்வமில்லாத பொறியியல் படிப்பில் பொறியில் சிக்கிய எலிபோல் கல்லூரியில் சிக்கிய நாள். 27.9.2000, an unforgettable day in my life. 11 வருடங்கள் போனதே தெரியவில்லை.
What a coincidence! அன்றும் மஹாளய அமாவாசை
ஷுபோ மஹாளையா !
