கார்த்திக் என்ற என் பெயரை எனக்குப் பிடிக்காமல் இருந்தது. பத்துப் பசங்களில் குறைந்தது நான்கு ‘கார்த்திக்‘களாவது இருப்பார்கள். பள்ளியில் என்னுடன் ஐந்து கார்த்திக்கள் படித்தனர். அதனால் இனிஷியலை வைத்துதான் கூப்பிடுவார்கள். “ஏ.கார்த்திக்” என்று பள்ளி நாட்கள் முழுதும் விளிக்கப் பட்டேன். நண்பர்களுக்கு ஃபோன் செய்து (அப்போதெல்லாம் லேண்ட்லைன்) ‘கார்த்திக் பேசறேன்‘ என்றால் ‘எந்த கார்த்திக்?’ என்றுதான் எப்போதும் பதில் வரும். இவ்வளவு பொதுவான பெயரை வைத்ததற்கு என் அம்மாவை பலமுறை வைதுள்ளேன். நான் பிறந்தபோது இது வழக்கில் அதிகம் இல்லாத பெயர் என்று சொல்வார்.
வழக்கமாக திரைப்படங்களில் கதாநாயகனுக்கு ராஜா, ராமு, பாலு, சிவா, கண்ணன் இவற்றில் ஏதாவது ஒரு பெயர் இருக்கும். முதன் முதலில் ‘காதல் தேசம்’ படத்தில்தான் கதாநாயகனுக்கு கார்த்திக் என்று பெயர் வைக்கப்பட்டது ஆனால் ‘அலைபாயுதே‘வுக்குப் பிறகுதான் கார்த்திக் என்ற பெயர் மிகவும் Modern & Smart பசங்களுக்கு உரித்தான பெயராக மாறியது
தேங்க்ஸ் டு மணிரத்னம். மாதவனும் நானும் ஒரே நாளில் பிறந்தோம். என்ன, அவர் பதினான்கு வருடங்கள் முன்னதாகப் பிறந்து விட்டார்
அதிலிருந்து என் பெயர் எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. (அன்றிலிருந்து ஷாலினி போல் ஒரு ஷக்தியைத் தேடிக் கொண்டிருக்கிறேன்). கல்லூரியில் சேர்ந்த வருடம் அந்தப் படம் வெளியானது. யாராவது என் பெயரைக் கேட்டு நான் சொன்ன பின் ‘கார்த்திக் நீ பணக்காரனா? கிளாஸ்ல லாஸ்டா? அடிக்கடி ஃபெயில் ஆவியா?’ என்று அலைபாயுதே வசனத்தைக் கண்டிப்பாக சொல்வார்கள். பிறகு உன்னாலே உன்னாலே, மொழி, தீராத விளையாட்டுப் பிள்ளை படங்களைத் தொடர்ந்து கார்த்திக் என்றால் Lover Boy/Casanova மாதிரியான கதாபாத்திரம் என்று உருவகப் படுத்தப்பட்டுவிட்டது. (‘ரிதம்’ படத்தில் அர்ஜுன் பெயர் கார்த்திகேயன் என்பதால் இங்கு சேர்க்கவில்லை)
விண்ணைத்தாண்டி வருவாயா வருவதற்கு முன் அந்தப் படத்தின் நாயகன் பெயர் கார்த்திக் என்று மட்டும் இருக்கக் கூடாது என்று நினைத்திருந்தேன். அப்போது எனக்கு சிம்புவைப் பிடிக்காததால் அந்த எண்ணம். டிரெயிலரில் கார்த்திக் பெயரைக் கேட்டதும் போச்சுடா! என்று நொந்துகொண்டேன். ஆனால் அலைபாயுதேவைவிட வி.தா.வா.வில் கார்த்திக் என்ற பெயர் மிகவும் ஸ்பெஷல் ஆகிவிட்டது. என் பெயர் மீது மிகவும் கர்வம் கொள்ள ஆரம்பித்துவிட்டேன். Thanks a lot to கௌதம். சின்மயி குரலில் கார்த்திக் என்று கொஞ்சலாகவும் குழைவாகவும் கேட்டால் ஒன்பதாம் மேகத்தில் பறப்பேன். (அதாங்க Cloud Nine) அந்தப் படத்தில் எத்தனை முறை கார்த்திக் என்று வருகிறது என பலமுறை எண்ணிப் பார்த்து தோல்வி அடைந்துள்ளேன். சின்மயிகூட அந்தப் படத்தின் டப்பிங் முடிந்தபின் ‘கார்த்திக்… கார்த்திக்‘ என்று தூக்கத்தில் பிதற்றியுள்ளார்
பாலிவுட்டில் கார்த்திக்கிற்கு இணையான பெயர் ராஜ்/ராகுல். ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’, ‘குச் குச் ஹோத்தா ஹை’ படங்களுக்குப் பின் ஷாருக்கானால் பிரபலமானது. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத கார்த்திக் கதாபாத்திரம் என்றால் ‘சர்வம்’ படத்தில் வரும் ஆர்யாவினுடையது. ஆதவன் எழுதிய கார்த்திக் என்ற சிறுகதை சமீபத்தில் படித்தேன். என்னை மிகவும் கவர்ந்து விட்டது. நான்கைந்து முறை படித்து விட்டேன்
ஆனால் இந்த செல்வராகவன் என் பெயரை நாறடித்து விட்டார். மயக்கம் என்ன படத்தின் பாடல்கள் வந்தபோதே எனக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் செல்வாவுக்காக கண்டிப்பாக படத்தைப் பார்க்கவேண்டும் என்று நினைத்தேன். இப்போது ட்ரெயிலரைப் பார்த்த பின்பு படத்தைப் பார்க்கவே கூடாது என்று முடிவு செய்துள்ளேன். மயக்கம் என்ன படத்தில் கார்த்திக் என்பது தனுஷுடைய பெயரா இல்லை வேறொருவர் என்று தெரியவில்லை. தனுஷுக்கு அந்தப் பெயர் பொருந்தவே பொருந்தாது. இதைப் பார்த்ததில் இருந்து எங்கள் வீட்டிலும் கார்த்திக் ஜாக்கிரதை என்று ஒரு போர்டு மாட்ட என் தம்பி கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறான். நண்பர்கள் அனைவரும் கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் Hate U செல்வா.
ஆனாலும் படம் வெளியாகும் தேதிக்கு ஒருவாரம் முன் சத்யம் திரையரங்கின் இணையதளத்தில் முன்பதிவு செய்வதற்காக நள்ளிரவில் கண்விழித்துக் கொண்டுடிருப்பேன் என்பது வேறு விஷயம்
திவ்யா, அனிதா கதாபாத்திரங்கள் போல கார்த்திக்கையும் ஒரு மறக்கமுடியாத பாத்திரமாக சித்தரிப்பார் என்ற நம்பிக்கை கொஞ்சம் இருக்கிறது.
Rachana
September 28, 2011 at 7:30 pm
Kaarthik, thirundhave maatta!!!
Kaarthik Arul
October 22, 2011 at 11:49 pm
maatten
janani
October 13, 2011 at 8:46 am
karthik………its very funny…….but nice
Kaarthik Arul
October 20, 2011 at 9:53 pm
Thank u Janani
சி.சரவணகார்த்திகேயன்
October 19, 2011 at 11:20 pm
யுவகிருஷ்ணா பாணியிலான சுவாரஸ்யமான தொகுப்புக் கட்டுரை..
Kaarthik Arul
October 20, 2011 at 2:27 pm
நன்றி CSK! நான் தமிழில் எழுதக் காரணமான மூவரில் நீங்கள்தான் முதலாமவர்
Gokul
October 20, 2011 at 1:59 pm
More than a decade since i have read any tamil article.. nice one karthik.. When i find time , i will read other articles as well….
Kaarthik Arul
October 20, 2011 at 2:29 pm
@Gokul, Thanks a lot.
Karthik Kumaresan
October 20, 2011 at 3:49 pm
nanum karthik thaan
Kaarthik Arul
October 20, 2011 at 5:58 pm
@Karthik Kumaresan,
யுவகிருஷ்ணா
October 20, 2011 at 4:30 pm
நல்லாருக்கு கார்த்தி!
Kaarthik Arul
October 20, 2011 at 5:59 pm
@யுவகிருஷ்ணா, நன்றி லக்கி